0
சமையல் எரிவாயு விலை திருத்தம், நாளை வெள்ளிக்கிழமை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் லிட்ரோ தலைவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, இலங்கையில் எரிவாயு விலை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.