இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன், யாழ்ப்பாணத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்தார்.
யாழ்.கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அத்துடன், நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு அவர் அஞ்சலி செலுத்தியதுடன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சினேக கிரிக்கெட் விளையாடிலும் அவர் கலந்துகொண்டார்.
எதிர்வரும் செம்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த சந்தோஸ் நாராயணன் திட்டமிட்டுள்ளார்.