செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞன் கைது!

0 minutes read

மொனராகலை, தணமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவன் தணமல்வில பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (13) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தணமல்வில – காமினிபுர பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய இளைஞன் ஆவார்.

தணமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கஞ்சா வைத்திருப்பதை கண்ட அதிபர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பாடசாலை மாணவனை விசாரணைக்கு உட்படுத்தியதில், தணமல்வில – காமினிபுர பகுதியில் வசிக்கும் இளைஞன் ஒருவனிடமிருந்து கஞ்சா கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான இளைஞன் தனது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனிடமிருந்து 850 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More