செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்டார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

இராணுவ ஆயுதக் களஞ்சியங்களை பார்வையிட்டார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

1 minutes read

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.

இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.

இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள்  தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில்  உள்ள அனைத்து இராணுவ வசதிகளிலும் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More