சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 83 டன் போலித் தங்கக் கட்டிகளால் சர்வதேச தங்கச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில், போலி கரன்சிகள் வலம் வரும் நிலையில், தற்போது போலி தங்கக்கட்டிகள் கைமாற்றப்பட்டு வருகின்றன. அதுவும், 83 டன் போலி தங்கக்கட்டிகளை கொண்டு, சீனாவில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.
இந்த மோசடி, கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வுகான் கிங்கோல்ட் ஜுவல்லரி என்ற நிறுவனம், இந்த போலித் தங்கக் கட்டிகளை ஈடாகக் காட்டி சுமார் 280 கோடி டாலர் கடன்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சர்வதேச தங்கச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.