Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பாடசாலையில் கால்பந்து போட்டியில் துப்பாக்கிச்சூடு

பாடசாலையில் கால்பந்து போட்டியில் துப்பாக்கிச்சூடு

0 minutes read

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், பள்ளியில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் காயமடைந்தனர்.


டொலிடோ நகரிலுள்ள விட்மர் உயர்நிலைப்பள்ளி ஸ்டேடியத்தில் நேற்றிரவு, மற்றொரு பள்ளியுடனான கால்பந்து போட்டி நடைபெற்றது.அப்போது ஸ்டேடியத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒரு சிறுவன் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், ஸ்டேடியத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு, ஓட்டம் பிடித்தனர்.


துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடிவரும் போலீசார், தகவல் அளிப்போருக்கு, இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More