யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேநேரம், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில், கரெவெட்டி வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.