செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகள் திறந்து வைப்பு!

வேலணையில் இரு கடற்றொழில் பண்ணைகள் திறந்து வைப்பு!

0 minutes read

வேலணை வடகிழக்கு பகுதியில் இரண்டு கடற்பண்ணைகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டன.

குறித்த இரு பண்ணைகளையும் அமைப்பதற்கு கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக அவை உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பண்ணை நண்டு உற்பத்திக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பண்ணையில், சுமார் 27 ஏக்கர் பரப்பில் 30 இலட்சம் ரூபாய் நிதியில் Ocean aqua farm நிறுவனமானது உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளது.

மற்றைய பண்ணையில் இறால் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பண்ணையில் அன்னை அன் சன்ஸ் நினுவனமானது சுமார் 144 ஏக்கர் பரப்பில் 720மில்லியன் ரூபாய் நிதியில் உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More