வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை (03) ஆரம்பமாகின்றது.
இத்திருவிழாவுக்கு 4,500 இலங்கை பக்தர்களையும் 3,500 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள் உள்ளடங்களாக 1,000 சிறப்பு அதிதிகளையும் அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் வண. அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் கச்சத்தீவு மகா மாங்கல்யத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழா, நாளை சனிக்கிழமை (04) நிறைவுபெறவுள்ளது.