இருமல் மருந்து மோசடி:
ஒடிசா மாநிலத்தில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் சிக்கியதுடன், சந்தேகத்தின் பேரில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.35 இலட்சம் மதிப்புள்ள இருமல் மருந்து போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கண்டறியப்பட்டு, அவர்களை பொலிஸார் தொடர்ச்சியாக பின்தொடர்ந்ததில, மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் சிக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்களை கைது செய்ய, உள்ளூர் மக்கள் அளித்த தகவல், தகவல் தொழில்நுட்பம் மூலம் கிடைத்த தகவல்கள், பல்வேறு துப்புகளைக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.