செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

0 minutes read

வாகன விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – சீதவாக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டோவும் ஹயஸ் வானும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஓட்டோ சாரதியான 38 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலும், அதில் பயணித்த 11 வயது சிறுவன் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோவில் சிறுவனுடன் பயணித்த 36 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹயஸ் வானின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More