செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டெஸ்டில் அதிக சிக்ஸ் | ரோகித் சர்மா சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

டெஸ்டில் அதிக சிக்ஸ் | ரோகித் சர்மா சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

1 minutes read

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்கில் இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

ஜெய்ஸ்வால் (13), கருண் நாயர் (40), சுப்மன் கில் (16) அடுத்தடுத்து ஆட்டமிழக்க கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இன்றைய 3ஆவது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

ரிஷப் பண்ட் ஸ்கோரி 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். 2 சிக்சர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 88 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சேவாக் 90 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். எம்.எஸ். டோனி 78 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.