அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியினால் இன்று காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம்நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆயுர்வேத மருந்தகங்களையும் , ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் திறப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரதேச செயலாக பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது நடமாடும் சேவைக்கு அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி, வெனிவேல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் , ஆயுர்வேத சிகிச்சைகளை பெறுவோருக்கு வீடுகளுக்கே மருந்துகளை அனுப்புவதற்கும் அத்தியாவசிய சேவைக்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.