அதிர்ஷடக் காற்று வீசினால், ஒரே இரவில் சாமானியனைக் கூட லட்சாதிபதியாக்கி விடும். அந்த வகையில், கடந்த வாரம் வரை ரயிலில் பாட்டு பாடி பிச்சை எடுத்த பெண் தற்போது, பின்னணி பாடகியாக மாறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது ரனகத் ரயில் நிலையம். அங்கே பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் பாடி உள்ளார்.
அவரின் பாடலைக் கேட்டு மெய் சிலிர்ந்த ஒருவர், அதனை அப்படியே வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலாகப் பரவிய அந்த வீடியோவை பார்த்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம், ரனு மண்டலை சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகள் செய்து தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பை அளித்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியிருந்த ரனு மண்டலுக்கு, பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ஒரு சில பாலிவுட் இசையமைப்பாளர்களும் அந்த பெண்ணுக்கு பாட வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.