Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை தற்கொலை விவகாரம் |  முக்கிய கடிதம் சிக்கியது

நடிகை தற்கொலை விவகாரம் |  முக்கிய கடிதம் சிக்கியது

2 minutes read

வாய்தா, துப்பறிவாளன் படத்தில் நடித்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர்.தீபா

தீபா

“நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜெசிகா, ஒருதலை காதலால் உயிரை விட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நடிகையின் இந்த ஒருதலை காதலின் பின்னணி பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். நடிகை ஜெசிகாவை ஒருதலையாக காதலில் விழ வைத்த வாலிபர் சினிமா துறையைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.தீபா

தீபா

நடிகை எழுதிய கடிதத்தில் தான் காதலித்த வாலிபர் யார்? என்பதை குறிப்பிடவில்லை. இதனால் அவர் யார்? என்பதை உடனடியாக அடையாளம் காண முடியாததால், நடிகை ஜெசிகாவின் செல்போன் எண்ணை வைத்து அவரது காதலன் யார்? என்பதை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவரது செல்போனை முழு மையாக ஆய்வு செய்து வருகிறார்கள். தற்கொலை தொடர்பாக செல்போனில் ஏதேனும் பதிவுகளை ஜெசிகா வைத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.தீபா

தீபா

நடிகையின் காதலனை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதால், இந்த விசாரணைக்கு பிறகே நடிகை தற்கொலைக்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா? என்பது தெரியவரும். இதற்கிடையே நேற்று காலையில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகை ஜெசிகா வண்ணாரப் பேட்டையை சேர்ந்த தனது நண்பர் ஒருவருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை, சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு துண்டித்துள்ளார்.தீபா

தீபா

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் அருகில் உள்ள சக நண்பர்களுடன் அங்கு சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெசிகாவின் மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More