Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா யானையுடன் இணைந்திருக்கும் சண்முக பாண்டியன்

யானையுடன் இணைந்திருக்கும் சண்முக பாண்டியன்

1 minutes read

கேப்டன் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யூ. அன்பு இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

காடு மற்றும் காட்டில் வாழும் யானைகளின் வாழ்வியலுடன் இணைந்து பயணிக்கும் இந்த திரைக்கதையில் வனம் மற்றும் வனவிலங்கு ஆர்வலராக சண்முக பாண்டியன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆடி மாதம் 18 ஆம் திகதியன்று தொடங்குகிறது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, ஒரிசா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டில் உள்ள காடுகளில் நடைபெறும் என்றும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் சண்முக பாண்டியன், இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் எம் எஸ் பாஸ்கர், நடிகை யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கதை வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுத, எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தத் திரைப்படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் போது தேமுதிக கட்சியின் முன்னணி தலைவரான பிரேமலதா விஜயகாந்த் பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் திட்டமிட்டபடி வெளியாவதில்லை என்ற எதிர் நிலையான கருத்தினை இந்தப் படம் தகர்க்கும் என எதிர்பார்ப்போம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More