Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி | விஷம் கொடுக்கப்பட்டதா?

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி | விஷம் கொடுக்கப்பட்டதா?

1 minutes read

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் எதிர்வரும் 19 ஆம் திகதி  நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பல பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டு வந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் இன்று வியாழக்கிழமை (18) அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில்,

“நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்.

மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி… உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet குடுத்தும் வலி நிக்கல. அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோம் க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More