செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

2 minutes read

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

Movies

தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ்- தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – பசங்க புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ,அனந்திகா சனில்குமார் , சாண்டி மாஸ்டர் ,மிஷ்கின், தமிழ்குமரன், சந்தோஷ் சோபன், காயத்ரி, பூர்ணிமா ரவி மற்றும் பலர்.‌

இயக்கம் : பாண்டி ராஜ்

மதிப்பீடு : 2.5 / 5

‘தலைவன் தலைவி’ என்ற வணிக ரீதியாக பிரம்மாண்ட வெற்றியை பெற்ற படத்தை இயக்கிய இயக்குநர் பாண்டி ராஜ் இயக்கத்தில் தயாரான கொமடி திரில்லர் திரைப்படம் ‘பரிமளா & கோ’. அறிமுகமான மற்றும் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதால் யாராவது ஒருவர் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இந்தப் படத்தைக் காண பட மாளிகைக்குள் சென்றனர். அவர்களின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா? வீணடிக்கப்பட்டதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சென்னை போன்ற மாநகரம் ஒன்றில் சிங்கிள் பெட்ரூம் வாடகை வீட்டில் வசித்து வரும் பரிமளா- (ஜெயராம்) சுதந்திரம் (ஊர்வசி) தம்பதிகளுக்கு பராசக்தி ( சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி)  மதுமிதா ( அனந்திக்கா சனில்குமார்) என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். வாயாடியான பராசக்திக்கு அப்பாவியான சந்தோஷ் சோபன் மீது காதல் வருகிறது. அமைதியாக இருக்கும் மதுமிதாவை வர்கீஸ் எனும் சட்ட விரோதமான முறையில் போதை பொருளை விற்பனை செய்யும் ரவுடி.. காதல் தொல்லை கொடுக்கிறான். அத்துடன் வர்கீஸ் பரிமளாவின் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்கிறான். இதனால் கூனி குறுகும் பரிமளா பேமிலியினர் வர்கீஸை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள். இதற்காக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம் ‘ திரைப்படத்தை பார்த்து தங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் வர்கீஸ் கொடூரமாக கொல்லப்படுகிறார். அவனை கொன்றது யார்? என்ற விசாரணையை காவல்துறை தொடங்குகிறது. இதில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் எம்பெருமான்(மிஷ்கின் ) பரிமளா ஃபேமிலி மீது சந்தேகம் கொள்கிறார். இறுதியில் வர்கீஸை கொன்றது யார்?  அதன் பின்னணி என்ன?  என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

Bollywood & South Asian Film

போதை பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பிற்கும்.. உறவை தொலைத்தவர்களின் நிர்கதியற்ற நிலைக்கும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல முயற்சித்து.. அதனை டார்க் ஹியூமர் கலந்து சொல்லி இருக்கிறார் பாண்டிராஜ். முதன் முதலாக பாண்டிராஜ் டார்க் ஹுயூமர் ஜேனரில் முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சி பலிக்கவில்லை. சில இடங்களில் மட்டுமே சின்னதாக சிரிப்பு வருகிறது. ஏராளமான கிளை கதைகள் தொடர்வதால் சோர்வும், குழப்பமும் ஏற்படுகிறது.

வர்கீஸ் -மதுமிதா- கோமதி- ஆகியோரின் முக்கோண காதல் கதை கலகல.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – சந்தோஷ் சோபன் காதல் அக்மார்க் சினிமா ரொமான்டிக்.

பரிமளா – சுதந்திரம் ஜோடியின் நடிப்பு வழக்கமான  ரியாக்ஷன்.

எம் பெருமான் ( மிஷ்கின் ) நடிப்பு-  டிட்டோ ( ,,,) ரகம். ஆனால் இவருக்கான கதாபாத்திர வடிவமைப்பு கவனம் பெறுகிறது.

வர்கீஸின் வில்லத்தனம்- ஓகே ரகம். ஆனால் பேயாக மிரட்டுவது பூமர்.

யோகி பாபு- சிங்கம் புலி- பக்ஸ் பகவதி பெருமாள்- கூட்டணி…எக்ஸ்ட்ரா லக்கேஜ்- நோ கொமடி பேக்கேஜ்.

சில இடங்களில் உரையாடல் கவனம் ஈர்க்கிறது. சில இடங்களில் சின்ன புன்னகைக்காக பல நிமிடங்கள் திரையில் கதாபாத்திரங்கள் பேசுவதை பொறுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.‌

Movie Reviews & Previews

ஒளிப்பதிவு- பாடல்கள் – சிறப்பு. இவை ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல்.  அதிலும் முதல் பாதியில் ஓப்பனிங் சாங்… இரண்டாவது பாதியில்  பூர்ணிமா ரவி – சாண்டி மாஸ்டரின் பாடலை கேட்பதற்கும் , நடனமாடுவதற்கும் ஏற்றது.

பரிமளா & கோ – தூக்குதூக்கி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.