செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு 24 மணி நேரத்தில் 63,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் – மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு!

24 மணி நேரத்தில் 63,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் – மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு!

0 minutes read

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 63,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த மஞ்சள் நிற இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை (yellow thunderstorm warning) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதல்கள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திலும் மேலும் மழை மற்றும் இடி மின்னலுக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.