Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்

கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்கவிதை | நிலம் நோக்கி | முல்லை அமுதன்

0 minutes read

 

மரங்கள்

அசைகின்றன..

அருகில்

நிற்பவற்றுடன்

குசுகுசுக்கின்றன…

ஏதோ

சமிக்ஞை

புரிந்திருக்கிறது…

 

கிளைகளை

ஒடித்துவிட்டு

மொட்டையாய் விட்டனர்..

பின்னர்-

ஆயுதம் செய்யலாம் என்று

தறித்தனர்…

வேர்களோடி

உரம்பெற்று

நிற்கும் என்பதை

கோடரிகள்

மறந்துவிட்டன…

 

கொஞ்சம் கொஞ்சமாக

மனித மரங்களும்

அசைந்து பார்க்கின்றன..

பறவைகள்

குதூகலமாக

வான்பரப்பெங்கும்

பறந்தன…

காலம் தாழ்த்தியாவது-

வல்லூறுகளும் தமக்குள்

பேசுகின்றன..

 

மரங்கள்

மெல்ல மெல்ல

நிலம் நோக்கி

அசைகின்றன…

 

– முல்லை அமுதன் –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More