0
.
கால் கடுக்க பயணங்கள்
அந்தக் கடற்கரையோரம்.
நேற்றுப் போல் இருக்கிறது
எம் வாழ்வின் வடுக்கள்,
.
புலரும் பொழுது முற்றத்தில்
உடலங்கள்
புரியாத புதிராய் தொலைத்தோம்
அந்த நாட்களை
.
காலையில் கஞ்சிக்கு அரிசி
வேண்டப்போன அப்பாவை
காணவில்லை..
அடுத்த பொழுது
எம் காதுக்கு எட்டிய செய்தியாய்
வந்து போனது அப்பாவின்
இறப்பு
எப்படி மறப்பது-எம்
வாழ்வின் கடைசி பொழுதை
.
அம்மாவின் தாலாட்டில் தூங்கிய பிள்ளை
எறிகணையின் தாலாட்டில்
மண்ணுக்குள் மறைந்தது…
எப்படி எம்வாழ்வு?
.
அந்த பனை மரத்தடியில்;
எத்தனை எண்ணங்கள் நினைவுகளுடன்
காலையில் கதை பேசிய காதல் ஜோடிகள்
கூவி வந்த சன்னங்கள் அவர்களை
மாலையில் தூங்கச் செய்தன…
.
அம்மாவின் கடைசிக் கஞ்சி
ருசிக்க முன்பு அவர்
கொத்து மழையில்
என்முன்னே முத்தமிட்டா….
.
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை…
.
.
என்றும்
நீங்கா நினைவுடன் | உங்கள் நிலவு