December 2, 2023 2:16 pm

திருமலை விபத்தில் இளைஞர் ஒருவர் சாவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வெருகல் – இலங்கை துறைமுகத்துவாரத்தைச் சேர்ந்த சந்திரராஜ் கஜேந்திரராஜ் (வயது 21) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டுக்குத் தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரைக் கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்