Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 23 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 23 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

1 minutes read

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

அதேவேளை, காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87ஆவது நாளாக நீடித்து வருவதுடன், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசாமுனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரத்து 978 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் நடந்த மோதலில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More