Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்கள்! – பீரிஸ் கூறுகின்றார்

ரணிலின் ஆட்சி தொடர்ந்தால் புலிகள் உயிர்த்தெழுவார்கள்! – பீரிஸ் கூறுகின்றார்

1 minutes read

விடுதலைப் புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும் என்று இனவாத சிந்தனையுடன் அறைகூவல் விடுத்துள்ளார் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் முக்கியஸ்தர் ஜி.எல்.பீரிஸ் எம்.பி.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த ஆட்சி தொடர்ந்தால் எமது படையினரால் சாகடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கூட உயிர்த்தெழுவார்களாம். அவர்களின் தனிநாட்டுக்கான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும். எமது படையினரின் தியாகம் வீணாகிப்போகும். அவ்வளவுக்கு ரணிலின் ஆட்சி மோசமடைந்து செல்கின்றது.

வடக்கு, கிழக்கில் கடந்த மாதம் ‘மாவீரர் நாள்’ என்ற பெயரில் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் ரணில் அரசின் முழு அனுமதியுடன்தான் நடைபெற்றன.

மரணித்த புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கிவிட்டு அதில் பங்கேற்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணில் அரசு நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது. இப்படிக் கூறி சிங்கள மக்களை ஏமாற்றலாம் என்று ரணில் அரச தரப்பினர் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுதான் புலிகளை நினைவேந்த முதலில் அனுமதி வழங்கியது. இப்போது ரணில், மொட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு மீண்டும் புலிகளைப் பகிரங்கமாக நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளார்.

எனவே, புலிகளை நினைவேந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கிய ரணிலின் ஆட்சிக்கு முடிவுகட்டச் சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More