சிவனின் நெற்றிக்கண் பார்வையிலிருந்து நந்தியை தவிர வேறு யாராலும் நிற்க முடியாது இது நந்தி பாகவானுக்கு சிவனே அளித்த வரமாகும்.
நந்தியின் வரம் கிடைக்கும் பொது இலகுவாக சிவனின் வரம் கிடைத்து விடும். பிரதோஷகாலங்களில் சிவனை வழிபடுபவருக்கு நந்து மூலமாக பெரிய பலன்கள் கிடைக்கும்.
நந்தி என்னும் சொல்லுடன் ஆ என்னும் சொல் சேரும் போது ஆநந்தி என பொருள்படும். நீயும் ஆனந்தமாய் இரு மற்றவரையும் ஆனந்தமாய் வைத்திரு என சிவபெருமான் அளித்த வரம் அது.
ஆலயங்களில் காவல் காக்கும் உரிமை நந்திக்குரியது எனவே தான் மதிற் சுவர்களில் நந்தியின் திருவருவங்களை வைக்கின்றனர்.