இங்கிலாந்தில் ஆசிரியர்கள் முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தேசிய கல்வி ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் சம்பளம், நிபந்தனைகள் மற்றும் பணிச்சுமை குறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்த இங்கிலாந்து அரசாங்கமும் கல்வித் தொழிற்சங்கங்களும் ஒப்புக்கொண்டுள்ளன.
இன்று முதல் (17) இவ்வார இறுதிவரை இடம்பெறவுள்ள அரசாங்கத்துடனான இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு காணும் பொருட்டு, வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் இரு வாரங்களுக்கு அமைதியான காலகட்டத்தை உருவாக்க புதிய வேலைநிறுத்தங்களுக்கான அழைப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தேசிய கல்வி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதையும் பாருங்க – வைத்தியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சு