ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் போர் தொடுத்ததையடுத்து, அங்குள்ள குழந்தைகளை அபகரித்துச் சென்றதாகவும், சட்டவிரோத நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புடின் மீது போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : உலகில் பணக்கார அரசியல் தலைவர் புட்டின்
அத்துடன், இதே குற்றச்சாட்டில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையாளரையும் கைதுசெய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் இருவர் மீதும் போர் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜோ பைடன் வரவேற்பு
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.