Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சொந்த தம்பியை 20 துண்டுகளாக வெட்டிய அக்கா

சொந்த தம்பியை 20 துண்டுகளாக வெட்டிய அக்கா

1 minutes read

காதலைக் கண்டித்த தம்பியை அக்காவும் அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்து 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசி உள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பட்ட தேவனாங்காவ் என்ற கிராமத்தில் 31 வயதான பாக்கிய ஸ்ரீ என்ற பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா தளவார் என்பவரைக் கல்லூரி படித்த காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். எனினும், திருமணத்திற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சங்கரப்பா தளவாருக்கு திருமணம் ஆகி உள்ளது. ஆறு மாதத்தில் மனைவியைப் பிரிந்த அவர் கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள ஜிகினி தொழில் பேட்டைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

அவ்வப்போது தனது முன்னாள் காதலியான பாக்கிய ஸ்ரீயுடன் அலைபேசியில் பேசிய அவர், தான் தங்கியிருக்கும் ஜிகினி பகுதிக்கு அவரை வரும்படி அழைத்துள்ளார்.

இதனையடுத்து, இருவரும் ஜிகினி தொழில் பேட்டையில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்து ஒன்றாக தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தனது அக்காவான பாக்கியஶ்ரீயை தேடி அவரது தம்பி லிங்கராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். அங்கே தனது முன்னாள் காதலன் சங்கரப்பாவுடன் அக்கா சேர்ந்து வாழ்ந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சங்கரப்பாவிற்கு திருமணமாகிவிட்ட காரணத்தினால் அவருடன் நீ சேர்ந்து வாழக்கூடாது என அக்கா பாக்கியாவை பல முறையில் லிங்கராஜ் எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து மூன்று பேரும் ஒரே அறையில் தங்கியிருந்தபோது இது குறித்து லிங்கராஜ் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

தங்களது உறவுக்கு தம்பி லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக நினைத்த பாக்கிய ஸ்ரீ தனது காதலர் சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும் அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி மூன்று பைகளில் எடுத்து ஜிகினி மற்றும் அதன் அருகே இருந்த மஞ்சனஹள்ளி ஏரியில் வீசி உள்ளனர்.பின்னர் இரண்டு பேரும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

எட்டு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த ஜிகினி காவல் துறையினர் லிங்கராஜை கொலை செய்தது அக்காவும் அவரது காதலரும் தான் என கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை கண்டுபிடித்த காவல்துறையினர், மார்ச் 19ஆம் திகதி இருவரையும் கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More