Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஓவியம் வரைந்த சிறுமியின் தந்தைக்கு 2 வருடங்கள் சிறை!

ஓவியம் வரைந்த சிறுமியின் தந்தைக்கு 2 வருடங்கள் சிறை!

0 minutes read

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமாக போர் நடந்து வருகின்றது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் விதமாக, ஓவியம் தீட்டிய ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனில் வசிக்கும் தாய், மகள் மீது ஏவுகணை வீசுவதுபோல் மாஷா என்ற 12 வயது சிறுமி, தனது பாடசாலையில் ஓவியம் வரைந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது ஆசிரியை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரது தந்தை மோஸ்காலியோவிடம் பொலிஸார் விசாரித்தபோது, அவரும் உக்ரைன் போரை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, மோஸ்காலியோவை வீட்டிலேயே சிறை வைத்த பொலிஸார், மாஷாவை குழந்தைகளுக்கான காப்பகத்தில் சேர்த்தனர்.

தந்தை தப்பியோட்டம்

இந்த நிலையில், மோஸ்காலியோவிற்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இரவோடு இரவாக வீட்டுக் காவலிலிருந்து தப்பிச் சென்ற மோஸ்காலியோவை பொலிஸார் தேடிவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More