அமெரிக்கா – டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.
கேர் வட்டாரத்தில் உயிரிந்த 68 பேரில் 28 பேர் சிறுவர்கள் ஆவர். ஏனைய வட்டாரங்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என டெக்சஸ் ஆளுநர் கிரெக் அபொட் கூறினார்.
மேலும், சிறுமிகள் உட்பட 40 பேரைக் காணவில்லை.
தொடர்புடைய செய்தி : வெள்ளக் காடாகியுள்ள அமெரிக்க டெக்சாஸ் மாநிலம்; உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்வு!
ஆற்றங்கரையோரம் இருந்த Camp Mystic முகாமிலிருந்து காணாமல் போன சிறுமிகளில் 10 பேர் மற்றும் அவர்களுடன் இருந்த ஆசிரியரையும் தேடும் பணி தொடர்கிறது.
தேடல் முயற்சிகளில் நம்பிக்கை குறைந்து வருவதால், மீட்பு நடவடிக்கைக்குப் பதிலாக, நிவாரணப் பணிகளில் கவனம் திரும்பலாம் என்று BBC கூறுகிறது.
டெக்சாஸ் மாநில குடும்பங்கள் நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தை அனுபவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.