செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டுத் தாக்குதல்: ஐந்து அதிகாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்திற்கு வெடிகுண்டுத் தாக்குதல்: ஐந்து அதிகாரிகள் உயிரிழப்பு

1 minutes read

பாகிஸ்தானில் பொலிஸாரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்குவா (Khyber Pakhtunkhwa) மாகாணப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலிஸார் பயணித்த வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதன் பின்னர் துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பொறுப்பை பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு (TTP) ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் எப்போதும் முன்னணியில் இருந்து முக்கிய பங்கு வகித்து வருவதாகக் கூறினார். உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அவர்களின் தியாகம் வீணாகாது என்றும் உறுதியளித்தார்.

பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சமீப காலமாக வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிளர்ச்சிக் குழுக்கள் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு, பாகிஸ்தானில் தாக்குதல்களைத் திட்டமிடுவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. எனினும், ஆப்கானிஸ்தான் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

இந்த தாக்குதல், பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் மேலும் சீர்குலையக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.