செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்க நிறுவனங்கள் மீதான வரி விவகாரம்: இங்கிலாந்துக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க நிறுவனங்கள் மீதான வரி விவகாரம்: இங்கிலாந்துக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

1 minutes read

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள டிஜிட்டல் சேவை வரியைத் திரும்பப் பெறாவிட்டால், அந்த நாட்டின் மீது கடுமையான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் செயல்படும் முக்கிய சமூக ஊடக நிறுவனங்களின் வருவாயில் 2% வரி வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, உலகளாவிய அளவில் 500 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களைக் குறிவைத்து 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இங்கிலாந்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வரி மூலம் அவர்கள் ஈட்டும் தொகையை விட அதிக அளவிலான பாதிப்பை வரிகள் மூலம் அமெரிக்கா ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த வரி விவகாரம் மாற்றப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்த விதிகளை மாற்ற முடியும் என டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்துத் தாக்க நினைக்கும் நாடுகளுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கப்படும் என அவர் தனது சமூக வலைதளப் பதிவிலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.