கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் 7 வார ஊரடங்கிற்கு பிறகு பொதுமக்கள் வெளியே வந்து தனியாக விளையாடவும், உடற்பயிற்சி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோயின் தீவிரம் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கும் விதமாக காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 11 மணி வரையிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்காக பொதுமக்கள் வெளியே வர அனுமதி தரப்பட்டுள்ளது.
மற்ற நேரங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.