உலகப் பொருளாதார நெருக்கடியைக் கையாளவென உரிய நேரகாலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக வலுவான உள்நாட்டு சந்தையுடன் உலகின் மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக 2030 இல் இந்தியா மாறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் குறிப்பிடுகையில், ‘கவர்ச்சிகரமான உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ள இந்தியா நேரடி முதலீடுகளுக்கு மிகப் பொருத்தமான இடமாகவும் உள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன’ என்றுள்ளார்.