Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; கனடாவில் பாரிய அளவில் போராட்டம்..!

யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; கனடாவில் பாரிய அளவில் போராட்டம்..!

1 minutes read

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதற்காக இலங்கை அரசைக் கண்டித்து 1,000க்கு மேற்பட்ட வாகனங்கள் கனேடிய ஈழ உணர்வளர்களால் பேரணியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அதாவது தங்கள் வாகனங்களில் விடுதலைப்புலிகளின் கொடியைக் கட்டி யாழ்.பல்கலையில் நடந்த இடித்தழிப்பை வன்மையாக கண்டித்தே இந்த பேரணி நடைபெற்றது.

கனேடிய மக்களின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி மேற்கொள்ளப்பட்ட இந்த பேரணியானது கனடா நேரம் மதியம் 2:45 மணிக்கு குயின்ஸ்பார்க்கில் நிறைவடைந்துள்ளது.அதாவது யாருக்கும் இடையுறு வழங்காமலே இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதனைக் கண்டித்து கனடாவின் Toronto நகரில் Ontario சட்டசபையினை நோக்கி இந்த வாகன பேரணி இடம்பெற்று வருகிறது.

தொடர்ச்சியாக இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டதை அடுத்து இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடாவில் வாழும் தமிழ் இன உணர்வாளர்களால் இக் கண்டன பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More