0
சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை கடற்பகுதியிலே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகுகள் ஊடாகப் பயணித்த போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.