2010 ம் ஆண்டு 500 பேருடன் சென்ற எம் .வி.சன்.சி கனடாவை அடைந்தது, கடந்த ஆகஸ்ட் மாதம் 76 பேருடன் சென்ற கப்பல் கனடா சென்றடைந்தது.இதை தொடர்ந்து ஆளுக்கு தலா 20 ஆயிரம் டொலர் என்ற பணத்தை பெற்று ஏஜன்சிகளால் ஏமாற்றப்பட்ட லேடி ஆர் 3 மீன்பிடிக்கப்பல் மூலம் கனடா சென்ற ஈழத்தை சேர்ந்த 303 பேருக்கும் இன்றைய நிலை வியட்நாம் இராணுவ முகாம்களில் தஞ்சம் மட்டுமே
இவர்களை அடுத்த கட்டமாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது வியட்நாம் அரசு.
இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற ஒரு சில அரசியல் குரல்கள் கேட்க தொடங்கி உள்ளது அதில் “ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் இந்த விடயத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அனுக வேண்டும்” என்று சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
இந்திய பாட்டாளி மக்கள் காட்சி தலைவர் இராமதாஸ் குரலும் அடங்கும் முன்னொரு போது இலங்கை தமிழர்களுக்காக மகிந்த ஆட்சி அவரின் ஊழல் அரசுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிட்டதக்கது.