ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் படைத் தலைமையகத்தில் விசேட உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார்.
இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் நடைபெற்றது.