உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி நாளைமறுதினம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வர்த்தமானி வெளியிடப்பட்டு 14 நாள்களின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.