December 7, 2023 9:14 pm

வவுனியா விபத்தில் குடும்பஸ்தர் மரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வவுனியா, ஏ – 9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமந்தையில் வெதுப்பம் நடத்தி வரும் சிவசேகரம் தினேஷன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்குத் தனது மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த்திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசேகரம் தினேஷன் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்