செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

0 minutes read

அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (18) இரவு  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த யாசகர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.