செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

0 minutes read

நாடு முழுவதும் உள்ள 1,000 தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,

பாரம்பரியத்துக்கான உயிர் (உருமய ஜீவயக) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஜூலை 7ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய தொல்பொருள் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 100 தொல்பொருள் தளங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு பாதுகாக்கப்படவுள்ளன.

தொல்பொருள் தளங்களைப் பாதுகாப்பதில் சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு இணையாக மற்றொரு திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.