செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மன்னார் மாவட்டமே சோக மயம்- பூரண கடையடைப்புடன் துக்கம்!

மன்னார் மாவட்டமே சோக மயம்- பூரண கடையடைப்புடன் துக்கம்!

1 minutes read

மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் சோக மயமாகக் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு,தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.

இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆயரின் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை மூன்று மணியளவில் இலங்கையின் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More