செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

வீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

1 minutes read

மட்டக்களப்பு- ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் (3 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய முஹம்மத் ரிழ்வான் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தாய் சம்பவத்தினத்தன்று மாலை, குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது, சிறுவன் படுத்து கிடந்ததாகவும் அவரது உடம்பின் மேல் வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவனை எழுப்பியபோது அவர் எழும்பாதமையினால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்தப்போது, சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று வைத்திசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More