செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

யாழில் முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

1 minutes read

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகள் ஆகியோருக்கு உதவித் திட்ட நிதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தனியார் விடுதியில், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் குறித்த உதவித் திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் முயற்சியின் பயனாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் தியாகேந்திரனின் நிதிப் பங்களிப்பில், 15 முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள், யாழ்.இராணுவ படைப்பிரிவுகளின் தளபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More