பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் ரங்கன ஹேரத் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தினை ரங்கன ஹேரத் கடந்த 12 Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் தனது குடும்பத்துடன் சிறிது காலத்தை செலவிடுவதற்கு விடுமுறை வழங்குமாறு கேட்டு அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரங்கன ஹேரத்தின் இந்தக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் காலித் மஹ்முத் கருத்து வெளியிடுகையில்,
ரங்கன ஹேரத் தனது குடும்பத்துடன் சில காலம் கழிக்க அனுமதி கோரியிருந்தார். எனவே, அவர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.