இந்தியாவின் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்.
கராமி முர்முவுக்கு அண்மையில், 2ஆவது பெண்குழந்தை பிறந்த நிலையில், வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது என்று நினைத்த கராமி முர்மு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு அதை ரூ.800க்கு விற்றுவிட்டார்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த கணவர் முசு, புதிதாக பிறந்த 2ஆவது குழந்தை பற்றி கேட்டுள்ளார். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக கராமி முர்மு பொய் கூறியுள்ளார்.
அதனால் கணவர் முசு பொலிஸாரிடம் புகார் அளித்தார். பொலிஸாரின் விசாரணையில், புதிதாக பிறந்த பெண்குழந்தையை ரூ.800-க்கு ஒரு குழந்தையில்லாத தம்பதிக்கு விற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி, அதற்கு ஏற்பாடு செய்த நபர் ஆகிய 4 பேரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.