செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 48 மணிநேரத்துக்குள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்! – பிரதமர் உறுதி

48 மணிநேரத்துக்குள் புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்! – பிரதமர் உறுதி

0 minutes read

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபர் ஒருவரைப் பெயரிடுவார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எப்போது புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படுவார் என்று சபையில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியல் சாசன சபையை எந்த நேரத்திலும் சபாநாயகரால் கூட்ட முடியும் எனவும், ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More