செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கொத்துக் குண்டுகள் பயன்படுத்திய உக்ரைன் | ரசியா

கொத்துக் குண்டுகள் பயன்படுத்திய உக்ரைன் | ரசியா

1 minutes read

உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று ரசியாவுடன்  தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரசியா புகார் ஒன்றை முன் வைத்துள்ளது கொத்துக் அமெரிக்க குண்டுகள் உக்ரைன் பயன்படுத்தியது என்பதே அது.

குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அடிக்கடி ரசியாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அவ்வாறு நடத்தும்போதெல்லாம், ரசியா பதிலடியாக ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு ஏவுகணை தாக்குலை ரசியா நடத்தியது.

அதில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. மீட்புப்படையினர் இடிபாடுகளை நீக்கியபோது, ஆறு பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க் கைப்பற்றிய ரசியா, தனது பகுதியாக அறிவித்துள்ளது.

இந்த பிராந்தியத்தின் மாகிவ்கா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதுவும் அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகள் மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும் ரசியா குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More