தாய்லந்துப் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாட்டை நிரந்தரமாகப் பதவியில் இருந்து நீக்க தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு, இம்மாதம் 29ஆம் திகதி வெளியிடப்படும் என்று அதன் அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதம், அவர் பிரதமர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
கம்போடிய செனட் சபை, ஜனாதிபதி ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடலில் பேதொங்தார்ன் அமைச்சர் நிலை ஒழுங்குமுறையை மீறியதாகப் புகார் அளிக்கப்பட்டது.
அவரது கருத்துகள் தாய்லந்தின் அரசுரிமை மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கீழறுத்ததாகக் குறை கூறப்பட்டது.
தொலைபேசி உரையாடலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பிரதமர் பேதொங்தார்ன், தமது கருத்துகளைத் தற்காத்துப் பேசியிருக்கிறார்.
அது பேரப்பேச்சில் பயன்படுத்தப்பட்ட ஓர் உத்தி என்று அவர் அதை வருணித்திருந்தார்.